மாங்குடி

முகமண்டபமும் வடக்குச்சுவரும் முழுமையடையாமலும், தெற்குச்சுர் முழுமையடைந்தும் அழகுற வெட்டப்படாதும் உள்ளது. கருவறைவாயிலின் முன்பு படிகள் ஏதுமில்லை, உட்புறம் சதுரக்கோட்டமானது சிறிது ஆழமாய் வெட்டப்பட்டுள்ளது. இதனுள் இலலிதாச இடம்புரி பிள்ளையார் செதுக்கப்பட்டு காட்சியளிக்கிறார். குடைவரையின் மற்ற பாகங்களை நோக்குகையில் இவர் காலத்தினால் சிறிதுபிற்பட்டவராகவே தோற்றமளிக்கிறார்.
பின்கையில் அங்குசமும், பாசமும், வலமுன்கையில் தந்தம் ஏந்தியும் அருளிக்கிறார். கரண்டமகுடமணிந்துள்ளார். உடைந்த அம்மன் சிலை ஒன்று குடைவரையின் இடப்புறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இக்குடவரையில் கல்வெட்டுகள், மற்றும் கட்டுமான உறுப்புகள் ஏதுமில்லாததால் இக்குடவரையின் காலத்தை கணிப்பது அரிது.
Reference :
புதுக்கோட்டை குடைவரைகள்
(மு.நளினி, இரா.கலைக்கோவன்)
0 comments:
Post a Comment