திருச்சி -மதுரை புறவழிச்சாலையில் விராலிமலையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் விராலூர். புறவழிச்சாயிலிருந்து இடதுபுறம் சென்றால் சிறிது தொலைவில் இவ்வழகிய கற்றளி அமைந்துள்ளது.
இக்கற்றளி முற்கால சோழர் கலைப்பாணியை கொண்டுள்ளது. நார்த்தாமலையிலுள்ளதை போல வேசரம் வகை விமான அமைப்பை கொண்ட அரிய கற்றளி.
இக்கோவிலில் கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. காலப்போக்கில் சிதைந்திருக்கும்.
சில சிலைகள் கோஷ்டத்திலும், பல அரிய சிலைகள் திறந்தவெளியிலும் உள்ளன. அரசின் நிதியுதவி பெற்று தற்சமயம் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. மற்ற நேரங்களில் கோவிலானது பூட்டியே கிடக்கிறது. இறைவன் பூமிநாதர் என அழைக்கப்படுகிறார்.
கட்டிடக்கலை பற்றி அறிய விழையும் மாணவர்கள், மரபுநடை பயணங்கள் செல்லும் ஆர்வலர்கள், இக்கோவிலையும் அவசியம் காணவேண்டும்.
இக்கற்றளி முற்கால சோழர் கலைப்பாணியை கொண்டுள்ளது. நார்த்தாமலையிலுள்ளதை போல வேசரம் வகை விமான அமைப்பை கொண்ட அரிய கற்றளி.
இக்கோவிலில் கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. காலப்போக்கில் சிதைந்திருக்கும்.
சில சிலைகள் கோஷ்டத்திலும், பல அரிய சிலைகள் திறந்தவெளியிலும் உள்ளன. அரசின் நிதியுதவி பெற்று தற்சமயம் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. மற்ற நேரங்களில் கோவிலானது பூட்டியே கிடக்கிறது. இறைவன் பூமிநாதர் என அழைக்கப்படுகிறார்.
கட்டிடக்கலை பற்றி அறிய விழையும் மாணவர்கள், மரபுநடை பயணங்கள் செல்லும் ஆர்வலர்கள், இக்கோவிலையும் அவசியம் காணவேண்டும்.
0 comments:
Post a Comment