Friday, July 13, 2018

தொல்லியல் எச்சங்கள் - 4


புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவில் தேனிமலை என்னும் ஒரு பெரிய மலைக்குன்று அமைந்துள்ளது. இங்கே  சமணர் புடைப்புச்சிற்பங்களும், சைவம் சார்ந்த சிறிய புடைப்பு சிற்பங்களும் பாறையில் குடையப்பட்டுள்ளன.

சமணர் சிற்பம் அமைந்த பாறைக்குச் செல்லும் வழியில் இடப்புறம் காணும் சிறுபாறையிலுள்ள பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இம்மலையை தேனூர்மலை எனக் குறிக்கிறது. மேலும் இம்மலையில்  மலையத்துவஜன் என்னும் சமணமுனிவர் தவம்புரிந்த பொழுது,  இருக்குவேளிர் மரபினைச்சேர்ந்த மன்னன் ஒருவன் இங்கு வந்து தங்கி, இங்கு தவம்புரிந்த சமணமுனிவர்களுக்கு பள்ளிச்சந்தம் கொடுத்த செய்தியை இந்த கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இக்கல்வெட்டு இன்று எளிதில் அறியாவண்ணம் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது,

தீர்த்தங்கரர் சிற்பங்கள் வெட்டப்பட்டிருக்கும் பாறையில் அவைகளுக்கு அருகே  தேன்கூடுகள் பெரிதாய் உள்ளன. கவனமாய்தான் இங்கு இவ்வரிய பொக்கிஷங்களைக் காண வேண்டியுள்ளது. சமணத்திருமேனிக்கு கீழே
ஸ்வஸ்திஸ்ரீ  ஸ்ரீவல்ல உதன செருவொட்டி
செய்வித்த திருமேனி '
என்ற கல்வெட்டும் காணப்படுகிறது!

இப்பாறைகளுக்கு பின்புறம் நடந்து சென்றால் பிற்காலத்திய இடும்பன், பிள்ளையார், சைவஅடியார் சிலைக புடைப்புகளாய் செதுக்கப்பட்டுள்ளன.




0 comments:

Post a Comment