Thursday, June 28, 2018

கல்வெட்டின் நிலையறிதல் -9



பிற்காலசோழசாம்ராச்சியத்தினை அடிகோலியவரும்  கல்வெட்டுகளில்   பரகேசரி என்றும் தன்னை தஞ்சைக்கொண்ட கோன் எனகூறிக்கொண்டவருமான விஜயாலசோழனின் [846-881] வரலாற்று சான்றுகளைப்பகரும் அரிதானக்கல்வெட்டுகளில்  திருக்கோவிலூரில் கிடைக்கப்பெற்ற நடுகல் தற்போது  சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது , புதுக்கோட்டைப்பகுதிகளில் அவ்ரதுகலைப்பாணியாக நிற்கின்ற நார்த்தாமலை, பனங்குடி போன்ற இடங்களில் இவரது கல்வெட்டுகள் தற்போது நமக்கு காணக்கிடைக்கவில்லை ,
திருவேங்கைவாசலில் தான்
ஆட்சிப்பீடத்தை அலங்கரித்த செய்தியை அழகாக  செங்கோல் ஏந்திய  ஐந்தாம் ஆண்டு இறைவனுக்கு நாதன் மழநாட்டுவேள்  என்பவர் நொந்தா விளக்கு தானம் கொடுத்ததை  பறைசாற்றுகிறார் ,

 1 , ஸ்வஸ்திஸ்ரீ பரகேசரி செங்கோல் பற்றிய வாண்டஞ்சில் திருவேங்கைவாயில் சிவர்க்கு விளைமா மேல் மாதா 
2 , ....க்கு நாதன் மழநாட்டு வேள் வெச்சான் மேதக்கன நந்தாவிளக்கு 

மேலும் கயஅ  ஆண்டில் வல்லநாட்டை சார்ந்த கவிர்ப்பால் கலையமங்கலத்தார் என்பவர்கலால் இறைவனுக்கு நந்தாவிளக்கெறிய தானம் கொடுத்த செய்தியும் உள்ளது .

1 , (கோப் )பரகேஸரி பன்மர்க்கு யாண்டு கயஅ  ஆவது இவ்வாண்டு பெருவாயில் நாட் 
2 , ( திருவேங்கை ) வாயில் திருமேற்றளி மஹாதேவர்க்கு வல்லநாட்டு கவிற்பாற் கலையமங்கலத்து ம 
3 , ....எட்டி ஆகிறே தாழி எள் சந்திராதித்தவர் எறிவதுக்கு திருநொந்தா விளக்கு 
4 , ...து இவை காசி நன் உழக்களந்..... சிதைந்துள்ளது .
#புதுக்கோட்டை_மரபுநடையில் நாம் பார்கவிருக்கும் தளங்களில் #திருவேங்கைவாசல் திருமேற்றளி மகாதேவர் ஆலயமும் ஒன்று 

Monday, June 4, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 8

பள்ளிப்படை :


சோழ, பாண்டிய, கங்க மன்னர்களின் பள்ளிப்படை குறித்து கேள்விப்பட்டிருப்போம். பழுவேட்டரைய மன்னர் ஒருவரின் பள்ளிப்படை குறித்த தகவல் தரும் ஒரு சிறிய கல்வெட்டினை இன்று காண்போம்.

அரியலூர் மாவட்டம் பழுவூரில் பழுவேட்டரையர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் கோவில்களை அறிந்திருப்போம்.அதில் ஒன்றான கீழப்பழுவூரில் இந்த கல்வெட்டு உள்ளது.

அதுவும் கோவிலில் அல்ல, கோவிலின் அருகேயுள்ள புதிதாக எழுப்பப்பட்ட கோவில் அலுவலகத்தின் கிழக்குச்சுவரில் இரண்டு துண்டுகல்வெட்டுகள் உள்ளது.  அதில் ஒன்றுதான் இந்த பள்ளிப்படை கல்வெட்டு.

இப்பள்ளிப்படை மறவன் கண்டன் என்பவருக்கு அவருடைய மகன் கண்டன் மறவன் என்பவரால் எழுப்பப்பட்ட கோவில் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு அறிஞர்கள் சு.ராஜகோபால், இரா.கலைக்கோவன் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதிலுள்ள வாசகம்

1.க்காக.....
2.டுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ.....
3.வட்டரையர் கண்டன் மறவனா.....
4.து தரவேண்டுமென்று கொங்....
5.யக் கிழவரோமும் அடிகள்....
6.ர் எடுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ....
7.றப் பொன்னும் அந்தராயமும்.......
(ARE 128 of 1987-88)

மேற்குறிப்பிட் தகவலையளிக்கும் இந்தக் கல்வெட்டு இன்று சுண்ணாம்புப் பூச்சில் சிக்கிக் கொண்டுள்ளது.