Saturday, October 27, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 17



விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு செல்லும் வழியில் செஞ்சியில் இருந்து சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மண்டகப்பட்டு என்னும் சிற்றூர்.
இவ்வூரின் மேற்கே ஒரு குன்றுஒன்றில், தரையிலிருந்து சுமார் 4 அடி உயரத்தில் மகேந்திரவர்மனால் ஒரு குடைவரை குடைவிக்கப்பட்டுள்ளது.

இக்குடைவரை மும்மூர்த்திகளுக்கும் எடுக்கப்பட்டது இதன் சிறப்பு. மண்டகப்பட்டு குடைவரையை மகேந்திரவர்மனின் ஆரம்பகால குடைவரை என அறிஞர்கள் கருதுவர்.

இக்கோவிலின் கிழக்கு அரைத்தூணில் மேற்குப்பகுதியில் ஒரு வடமொழி கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மண்ணின்றி, உலோகமின்றி, சுதைஇன்றி, மரமின்றி விசித்திரசித்தன் தோற்றுவித்தான் என பொருள்படும் கல்வெட்டு இது. இதிலிருந்து இதற்கு முன்னர் மண், சுதை, உலோகத்தினாலே கோவிலை மன்னர்கள் எழுப்பினர் என்பது தெளிவாகிறது.

இக்கல்வெட்டின் வாசகம்,
"ஏதத் அநிஷ்டகம் அத்ருமமலோ
கம் அசுதம் விசித்ர சித்தேந
நிர்ம்மாபிதந் நிருபேண பிரமே
ஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்"


1 comment: