Monday, October 22, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 16


நந்திக்கலம்பகம் பாடப்பெற்ற  நந்திப்போத்தரையர் எனும் மூன்றாம் நந்திவர்மனின் பத்தாம் ஆட்சி ஆண்டிற்குள்   நடைபெற்ற தெள்ளாற்றுப் போரினில்  கலந்து கொண்டு எதிரிவீரனின் அம்புக்கணைக்கு  இலக்கானபோதும் வெற்றியை தம்மன்னவனுக்கு ஈட்டித்தந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுச்சின்னம் இது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் சற்று காலம் கடந்து நந்திவர்மரின் இருபத்தியோராம் ஆட்சியாண்டில் தான் நிறுவப்பட்டுள்ளது. கல்வெட்டிலிருந்து இவ்வீரரின் பெயர் சத்திமுற்றதேவன். இவ்வீரர் போரில் முன்னேறிச் செல்லும் பாங்குடன் இடையில் அரையாடையும் இடக்கரத்தில் கேடயமும் வலக்கரத்தில் வாளும் தாங்கி நிற்கின்றார். காது மற்றும் கழுத்தில் அணிகலன் அலங்கரிக்கின்றன. மார்பின் பகுதியில் அம்புதைத்துள்ளது. (A.R.No. 144 of 1928-29) கல்வெட்டு சிறிது சிதைந்துள்ளது.


0 comments:

Post a Comment